சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய […]
