தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு ஆண்டுகளாக பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி பின்னே சென்றது. திடீரென ஐந்து அடி நீளமுள்ள […]
