கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மணிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருடன் பத்மாவதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பத்மாவதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு அருகில் […]
