மதுரையில் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு தாசில்தார் பட்டா போட்டு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்றையதினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நாவினிப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம், மைதானம், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து கிராம […]
