முதுமலை தெப்பக்காடு – கக்கனல்லா சாலையில் கர்நாடக அரசு பஸ் மீது பைக் மோதியதில் இரண்டு கல்லுாரி மாணவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குண்டல்பேட் தெருகனாம்பி பகுதியை சேர்ந்தவர் கோகுல். அதே போல நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்த சோமன். 21 வயதாகிய இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கின்றனர். கோகுல் குண்டப்பேட் தனியார் கல்லுாரியிலும், சோமன் அரசு கல்லுாரியிலும் படித்து வந்தனர். இவர்கள் தங்களது நண்பர்கள் 10 பேருடன், ஆறு பைக்குகளில் ஊட்டி நோக்கி சென்றனர். […]
