தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க உள்ள 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று கையெழுத்திட்டார். தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட்,அப்பல்லோ டயர்ஸ்,ஐநாக்ஸ் லிக்விட்ஆக்சிஜன் போன்ற 14 நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் நிறுவனங்களை தொடங்க முன்வந்துள்ளன. இதில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியானது ஆனது நெல்லை மாவட்டதிலுள்ள கங்கை கொண்டானிலும், ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனமானது ஓசூரிலும் அமையவிருக்கிறது.மேலும் […]
