உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற ஒரு கேள்வி தொடர்ச்சியாக இருந்து வரக்கூடிய நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் முக்கியமாக நடத்தப்படும் என்று தொடர்ச்சியாகவே பல்வேறு அமைச்சர்கள் தங்களது பேட்டி வாயிலாகத் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே மேற்கொண்டு வருகிறது. […]
