புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் […]
