டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். […]
