பதிவாளர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் யாருக்கும் தகுதியில்லாததால், மீண்டும் விளம்பரம் செய்து குழு அமைத்துத் தேர்வுசெய்ய காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவுசெய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு […]
