லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியசாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கொடுப்பதற்கு அண்ணாதுரைக்கு மனம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அண்ணாதுரையிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து […]
