அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தாமல் பணம் கையாடல் செய்ததாக நகராட்சி ஊழியரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் கண்ணன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டிற்கான தணிக்கை நடத்தப்பட்டபோது, நகராட்சியில் இருந்து சேவை வரி, வருமான வரி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ஒப்பந்ததாரர் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது போக ஜி.எஸ்.டி போன்றவற்றை அந்தந்த இடங்களுக்கு […]
