காதலியின் மீது சந்தேகப்பட்ட காதலன், காதலியின் கையை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியில் சாகிர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் வணிக வளாகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளனர். இந்நிலையில் தாஹிர் கானுக்கு தனது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]
