பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தையடுத்து பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையடுத்து இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடி அனுப்பியுள்ள கடிதத்தில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாதமும் , வன்முறையும் இல்லாத நிலையில், நாட்டின் ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றிற்காக தெற்காசிய மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று மோடி தெரிவித்துள்ள […]
