மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் கோட்டை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் தொலையாவட்டம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மாங்கரை பகுதியில் வைத்து பிரேம்ஸ் என்பவர் ஓட்டி வந்த டெம்போ சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
