புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ செங்கல்மேடு பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதியருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இவரது 2-வது பெண்ணான துர்காதேவிக்கும், அதேபகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவருக்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் மறு வீட்டு விருந்திற்காக செங்கல்மேடு வந்துள்ளனர். அப்போது துர்காதேவி வயிற்று […]
