கரும்புத் தோட்டத்துக்குள் நுழைந்த பாம்பை கொல்வதற்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாகியது . மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவிலுள்ள அவ்சரி என்ற கிராமத்தில் கரும்பு தோட்டம் ஓன்று உள்ளது. இங்கு விவசாயிகள் நேற்று காலை கரும்பு அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கரும்பு தோட்டத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பாம்பை கொல்ல முயன்றனர். அப்போது பாம்பு, அங்கிருந்த ஒரு புதருக்குள் சென்றது. பாம்பை கொல்வதற்காக, செடியும், செத்தையுமாக கிடந்த அந்த இடத்தில் அவர்கள் தீ […]
