பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் வால்பாறை பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வரவில்லை. இதனையடுத்து அருகில் இருக்கும் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்று மாலையில் நடந்தே வீடு திரும்பியுள்ளனர். […]
