பொதுவாக வட்டார இலக்கியங்கள் பெரும்பாலும் நமது வாழ்வை நகல் எடுப்பவையாகவே உள்ளது. குறிப்பாக ஆர்.சண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்”, ராஜம் கிருஷ்ணனின் “குறிஞ்சித்தேன்”, “கரிப்பு மணிகள்”, சி.சு.செல்லப்பாவின் “வாடிவாசல்”, ச.பாலமுருகனின் “சோளகர் தொட்டி” ஆகிய வட்டார இலக்கியங்கள் முக்கியமானவை ஆகும். பாமா, இமையம், பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் வேளாண், மீனவ, பழங்குடியினச் சமூகங்களை மையமாகக் கொண்டு எழுதி வருகின்றனர். அந்த அடிப்படையில் உத்தமசோழனின் “சுந்தரவல்லி சொல்லாத கதை”, கீழத்தஞ்சையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ஆகும். […]
