சபரிமலை தரிசனத்தில் கிடைத்த வருமானம், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்தின் போது சுமார் 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருமானத்தை விட இது 95 கோடியே 35 லட்சம் அதிகமாகும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலையில் சாத்தப்பட்டது.
