கல்லூரி மாணவனை கைது செய்ததற்காக நண்பர்கள் ரயிலை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்துள்ளார். நடந்த சோதனையில் அந்தப் பையில் இருந்து சுமார் […]
