பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் […]
