தந்தை கண்டித்ததால் மன உளைச்சலில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருநெல்லி கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி அவரது வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது தந்தை பழனிசாமி படிக்காமல் என் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த புவனேஸ்வரி விஷம் […]
