இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் முதல்நாடு கிராமம் கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி மாரியம்மன் பீடம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த வருடம் இந்த ஆண்டு வழிபாட்டிற்கான தேதி குறிக்கப்பட்டு நேற்று அம்மன் வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி கைக்குத்தல் பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டு உருண்டைகளாக உருட்டி படையலிடபட்டது. அதே […]
