தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது என மாவட்ட வழங்கல் அதிகாரி கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்கள் அதிகமாக வேலைதேடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு வேலைக்கு வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள ரேஷன் கார்டுகளை திருப்பூருக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாலுகா அலுவலகங்களில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் […]
