நாமக்கல் அருகே ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பட்டறை மேட்டில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் தான் அவரது வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் ஜெயகுமார் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீசார் […]
