ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படக் கூடாது என இந்திய உயர்மட்ட அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதன் உறுப்பினர்கள் சிலர் முயன்றுவருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிலும் சட்டப்பூர்வமாகவும், ஜனநாயக முறையிலும் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டம் யாரையும் வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. இதேபோன்ற […]
