கேரள கல்வித்துறை சார்பாக செய்திகுறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று (மார்ச் 31) தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 967 நபர்கள் பதிவு செய்துள்ளனர். சென்ற ஆண்டைவிட 5080 பேர் கூடுதலாக தேர்வு எழுத இருக்கின்றனர். இத்தேர்வானது 2962 மையங்களில் வைத்து நடைபெறும். இதில் அனைத்து தேர்வுகளும் காலை 9:45 மணி முதல் நடைபெறும். […]
