வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது.. வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை பார்த்து புவனேஸ்வரன் அலற, அவரது குடும்பத்தினரும் அதனைப் பார்த்து பயந்து போய் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். […]
