இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது. இதையடுத்து கோவை உக்கடம், […]
