டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை மின்வாரிய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து விட்டது. இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. […]
