கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே […]
