நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் பாம்பு இருந்ததை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சேத்துப்பட்டு பணிமனையில் சுத்தம் செய்வர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 7-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தவுடன் முன்பதிவு செய்த பயணிகள் அதில் ஏற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எஸ்-1 பெட்டியிலிருக்கும் 44-வது இருக்கையில் பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக வெளியே […]
