Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ஷீட்டுக்குள் இருந்த செம்மரகட்டை… உறுதிப்படுத்திய வனத்துறை அதிகாரிகள்… அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து கடத்த முயன்ற 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பெட்டிகளில் சுத்தமான படுக்கை விரிப்புகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டிகள் அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

21 டன் எடை… 420 ரேஷன் மூட்டைகள்… வெளிமாநிலத்திற்கு கடத்த முயற்சி… 7 பேர் அதிரடி கைது…!!

சாத்தான் குளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 21 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கும் அரசூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் அரசின் விலையில்லா ரேசன் அரிசி 21 டன் எடை கொண்ட 420 மூட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கடத் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனைத்தொடர்ந்து குடிமை பொருள் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கேரளாவிற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையினர் எல்லைப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரூ5,00,000….. மலேசியாவில் சிக்கிய இளைஞர்….. மீட்டெடுத்த கலெக்டெர்க்கு காலில் விழுந்து நன்றி…!!

மலேசியாவில் கடத்தப்பட்ட நபரை பத்திரமாக மீட்ட  சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கடத்தப்பட்ட இளைஞர் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். நாமக்கல்  மாவட்டம்  குக்கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் வேலூரைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர் மூலம்   மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதனை மலேசியாவில் ஆட்களை வைத்து கடத்திய நாகூர் கனி ஐந்து லட்சம் பணம் தர கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக விஸ்வநாதன்  பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சிலையைக் கடத்தலில் ஈடுபட்ட குருக்கள் உள்பட இருவர் கைது..!

நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலை உள்பட 9 சிலை கடத்திய இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்  கைதுசெய்துள்ளனர். நாகப்பட்டித்ததில் பஞ்சலோக அம்மன்  மற்றும் நடராஜர் சிலை விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்ட் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குருக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் கரன்சி நோட்டுகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா (33), கோவையைச் சேர்ந்த மகாலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்ன இடத்துக்கு ரூ50,00,000 வரணும்…… மாறுவேடத்தில் ஸ்கெட்ச்…… 4 பேரை தூக்கிய தமிழக போலீஸ்….!!

வேலூரில் பிரபலதொழிலதிபரை கடத்திய மர்மக்கும்பல் ரூ 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள்  அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை  சேர்ந்தவர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வழக்கம் போல எட்டு மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் பிரபாகரன்க்கு  செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அருள் தன்னை […]

Categories
மாநில செய்திகள்

அவுரா TO மும்பை எக்ஸ்பிரஸ்…. “ரூ5 கோடி”… 13 கிலோ தங்கம்….. கடத்தல் வேலையில் ஈடுபட்ட பலே திருடர்கள்….!!

ஒடிசாவில் விரைவு ரயில்லில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.  அவுராவிலிருந்து மும்பைக்கு செல்லும் ஞானேஸ்வரி விரைவு இரயிலில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரூர்கேலா என்ற பகுதியை வந்தடைந்த ஞானேஸ்வரி விரைவு ரயிலில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 110 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இந்தியா to இலங்கை” கடத்தல் முயற்சி… ரூ10,00,000 மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல்..!!

ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ44,00,000 தங்கம்” மலக்குடலுக்குள் வைத்து கடத்தல்… சோதனையில் முகம் சுழித்த காவலர்கள்..!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்கிய பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அப்துல் ரகுமான் மற்றும் இப்ராகிம் இஷா ஆகிய இரு பயணிகள் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை  அழைத்துச் சென்று உடமைகளை சோதனையிட்டனர். அதில், அவர்கள் இருவரும் மலக்குடலில் தங்கத்தை மறைத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கத்தி முனையில் கார் கடத்தல்… 1 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசார்..!!

கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்திக் கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது வசந்தகுமார் என்பவர் கோவையில் ரெட் டாக்ஸி என்ற பெயரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நபர்கள் இவரை அணுகி மதுரைக்கு கார் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். சூலூர் அருகே வந்தபோது ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்று நிறுத்த சொல்லியுள்ளனர். அப்போது திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்திக் கீழே தள்ளி விட்டு இருவரும் காரை கடத்திச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய கார் பறிமுதல் 2 பேர் கைது..!!

சென்னை தரமணி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள  எஸ்.ஆர்.பி. டூல்ஸ்  ஜெக் போஸ்டில்  அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை சோதனையிட்டதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த அபிஷேக் சிங்கா, குமார் ராஜா ஆகிய இருவரை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரனையில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து நடைபெரும் கனிமக் கொள்ளை” சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை …!!!

தொடரும்  கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் கொல்லிமலையில் அதிக மூலிகைகளும் கனிம வளங்களும் காணப்படுகின்றன. இதில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான  வனப்பகுதிகளிலும் இருக்கும் கனிம வளங்கள் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக அப்ப்குதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ,இயற்கை அழகு சிதையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்ததோடு மாவட்ட நிர்வாகம் […]

Categories

Tech |