சொத்து தகராறில் வாலிபர் சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற சகோதரர் இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான 16 வயது சிறுவன் அப்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகனின் மகனான தீபன் என்ற வாலிபர் சிறுவனை அவதூறாக திட்டியுள்ளார். இதனை அடுத்து உன் தந்தையால் […]
