மது வாங்கி தர மறுத்ததால் வாலிபரை சிறுவன் சோடா பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற போது 17 வயது சிறுவன் மது வாங்கி தருமாறு ரஞ்சித்துடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரஞ்சித் மது வாங்கி தர முடியாது என அந்த […]
