சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சொர்ண லட்சுமி கார்டன் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவியில் இருந்துள்ளார். இவர் கட்சிக்கு எதிராக நடந்த காரணத்தால் கடந்த ஆண்டு இவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். […]
