கால்நடை மருந்தை சப்பிட்ட 8 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் சிவமணி உள்பட 8 சிறுவர்கள் காமராஜர் நகர் பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் போது சாலையோரத்தில் சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருள் கீழே கொட்டி கிடந்ததை பார்த்த அவர்கள் அதை போட்டி போட்டு அள்ளி சாப்பிட்டுள்ளனர். அதன்பின் சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் […]
