புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை தினம் அன்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சனிக்கிழமை தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கோவில் வளாகத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை வைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு தயிர், நெய், இளநீர், பால் என 12 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. […]
