கார் மோதி சிறைச்சாலை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய பெக்மான். இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலை பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் மருதாடு சோதனை சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் ஆரோக்கிய பெக்மான் படுகாயமடைந்துள்ளார். இதனைப் பார்த்த […]
