கோவில் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த சாமி சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் காலை நேரத்தில் வழக்கம் போல் அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட 7 கிலோ எடை […]
