சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
