இந்தியாவில் கொரோனா – லாக்டவுன் காலத்தில் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள், பிரபலங்கள் சிலரை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை நீக்க அண்மையில் அறுவை சிகிச்சை நடந்தது. […]
