Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தலலுக்காக ராமர் கோயில் அறக்கட்டளை – சிவசேனா

ராமர் கோயில் விவகாரம் அரசியலாகும் என்று தாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ள சிவசேனா, டெல்லி தேர்தலை கவனத்தில் கொண்டு ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவை அறிவித்தார். 15 பேர் கொண்ட அந்தக் குழு தன்னாட்சி அதிகாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் […]

Categories
தேசிய செய்திகள்

தாக்கரே அயோத்தி பயணம், காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு…!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தில் கலந்துக்கொள்ளுமாறு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் மகா (மகாராஷ்டிரா விகாஸ் அகாதி) கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சிக்கு வந்தது. இதனை ‘மூன்று சக்கர ஆட்சி’ என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் இலாபத்திற்க்காக பயன்படுத்தியதில்லை – சிவசேனா

சத்ரபதி சிவாஜி பெயரையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரையும் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும்’ – சஞ்சய் ராவத்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அமையும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், ‘காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆட்சியமைக்கும் அரசின் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று கட்சிகளும் கூட்டாக முடிவு செய்யும். நேற்றுவரை, காங்கிரஸ்-என்சிபியின் மராத்தான் கூட்டங்கள் என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்றது. அடுத்த இரண்டு நாட்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு சோனியா எதிர்ப்பா? – பதிலளிக்கிறார் சரத் பவார்…!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. சந்திப்புக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளித்தார். சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை தீர்ப்பாரா மத்திய அமைச்சர்?

முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு அளிப்பது குறித்து இரு கட்சிகளிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன். முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிரா : 3 கட்சியினர் நாளை ஆளுனருடன் சந்திப்பு …..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சரத் வாங்க…. பாஜகவும் வேண்டாம்….. சேனாவும் வேண்டாம்…. ஆளுநர் அழைப்பு ..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அமைச்சர் வேண்டாம்” பதவியை தூக்கி எறிந்த சிவசேனா …..!!

பாஜகவுடனான கூட்டணி முறிவைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மாண் சேனா ஒரு இடத்தில் வெற்றிபெற்று தனது கணக்கைத் தொடங்கியது. சமாஜ்வாதி, பிரகார் ஜனசக்தி, ஓவைசியின் அகில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீங்க தான் முதல்வர்….. 2 நாளில் நிருபியுங்கள்….. பட்னாவிஸ்_க்கு ஆளுநர் செக் ..!!

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா – பாஜக இடையே ஆட்சிப் பகிர்வில் கடும் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வருகின்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவி… ”அப்பாக்கு வாக்கு கொடுத்துட்டேன்” அசைந்து கொடுக்காத உத்தவ்

முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

‘பால் தாக்கரே இருந்தால் தைரியம் வருமா?’ பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி…!!

பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டிலா? – பாஜகவை கலாய்க்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆதித்ய தாக்கரே முதலமைச்சராக வாய்ப்பு..?

மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,00,00,000 தரேன்…. ”அவ தலையை வெட்டு” சிவசேனா தலைவர் ஆவேசம் …!!

கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெட்டுடா தலையை.. ”ரூ 1 கோடி தரேன்’’….. அதிரவைத்த சிவசேனா தலைவர்…!!

சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என […]

Categories

Tech |