பாகிஸ்தானின் ஷாகாட் நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் ஷாகாட் (Shahkot) நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 85 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதிகள் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லாததே எச்.ஐ.வி நோய் பாதிப்பு […]
