திருமணம் செய்துகொள்வதாகக்கூறி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து 3 மாதம் பாலியல் தொல்லை அளித்து வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம் பகுதியில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி, தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் […]
