கூர்நோக்கு இல்லத்தில் இருந்த வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நான்கு சிறுவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள லட்சுமி மில் சந்திப்பில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு சாப்பாட்டிற்காக வெளியே விடப்பட்ட 11 சிறுவர்களில் 6 சிறுவர்கள் திடீரென வார்டனை தாக்கி, அவரை அவர்கள் தங்கி இருந்த அறையில் தள்ளி வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து 7 மணிக்கு சிறுவர்கள் […]
