திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]
