என்னடா ஆசிரியர் எப்ப பார்த்தாலும் நம்மையே திட்டிகிட்டே இருக்கிறார் என்று ஆத்திரம் கொள்ளும் அல்லது கொண்ட மாணவர்களா நீங்கள். அப்ப இந்த கதை உங்களுக்குத்தான் உளி படாத கல் சிற்பம் ஆகாது என்பதைப்போல ஆசிரியரிடம் திட்டு வாங்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற கருத்தை உள்வாங்கிக்கொண்டு கதைக்குள் செல்லலாம் வாங்க. ஒரு ஊரில் சுப்பையா என்னும் வாத்தியார் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வந்துள்ளார். அந்த ஊரிலேயே நன்றாக சொல்லித்தரும் ஆசிரியர்களுள் அவரும் ஒருவர். […]
