கணவர் மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி மெழுகு சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் லாரி ஓட்டுநரான இருசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நீலா பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். […]
